ரோம்: இந்தியாவிலிருந்து வடக்கு இத்தாலிக்குத் திரும்பிய அப்பா, மகளுக்கு இந்திய வகை கொரோனாவைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இருவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த மாதம்தான் மத்திய இத்தாலியில் ஒருவருக்கு இந்திய வகை கொரோனாவைரஸ் தாக்குதல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது வடக்கு இத்தாலிக்குப் பரவியுள்ளது. இந்தியாவிலிருந்து இத்தாலிக்கு வருவோர் தற்போது தடை செய்யப்பட்டுள்ளனர் என்பது நினைவிருக்கலாம்.
http://dlvr.it/RyV3Lb

0 Comments