மயிலாடுதுறை: பழைய இரும்பு கடையில் அரசு மாணவ-மாணவிகளுக்கு வழங்க வேண்டிய பாடப்புத்தகங்களை எடைபோட்டு விற்பனை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அந்த கடையின் உரிமையாளர், மயிலாடுதுறை கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளி புத்தக கிடங்கின் இளநிலை உதவியாளர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அதிமுக ஆட்சியில் கல்வி கடைச்சரக்காக ஆகிவிட்டது என திமுக எம்எல்ஏவும், முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சருமான தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்து உள்ளார்.
http://dlvr.it/Rpbwsc


0 Comments